சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் – பேர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு, வினோபாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் ஓடந்துறை டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார்த்திக் கடையில் இருந்தார். அப்போது ஊட்டி கேத்தி, பாலாடா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுந்திரராஜன் ( வயது 40 )தினகரன் ( வயது 25) ராஜா ( வயது 28 )ஆகியோர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு கார்த்திக்கின் கடைக்கு வந்து கடனுக்கு சிகரெட் கேட்டனர் . அப்போது கார்த்திக் கடனுக்கு கொடுப்பதில்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கார்த்திக்கை தகாத வார்த்தையால் திட்டியும், தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர் . அப்போது அவர்கள் 3 பேரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..