பார் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் வழிப்பறி – 2 பேர் கைது..!

கோவை : புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 26 ) இவர் கே. என். புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் காளப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ஒரு பவுன் செயின், பணம் ரூ. 2 ஆயிரத்தை கொள்ளடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பிரகாஷ் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வடவள்ளி வீரகேரளம் திம்மையா நகரை சேர்ந்த உதயமணி (வயது 25) அண்ணாதுரை (வயது 31 )ஆகியோரை நேற்று செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் செயின் பணம் ரூ 1000 பறிமுதல் செய்யப்பட்டது.