2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் ,பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 11 வயது சிறுமி , 10 வயது சிறுமி. இவர்கள்  விளையாடிக் கொண்டிருந்த போது பிரஸ் காலனி, அண்ணா நகரை சேர்ந்த சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 62 )என்பவர்ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா வழக்கு பதிவு செய்து சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..