பெற்ற 2 மகள்களையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை : 52 ஆண்டு ஜெயில் – கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!!

கோவையைச் சேர்ந்தவர் 45 வயது கூலி தொழிலாளி.இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த தொழிலாளியின் மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். மனைவி வேலைக்கு சென்றபோது அந்த தொழிலாளி தனது 2 மகள்களையும் மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிகள் படித்து வரும் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பாக விழிப்புணர்வுடன் நிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது அந்த மாணவிகள் 2 பேரும் தங்கள் நடந்த கொடுமைகளை தனியாக தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் கூறி அழுதனர் .அது கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் அந்த மாணவிகளின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரி பேரில் கோவை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த தொழிலாளி தனது 2 மகள்களை 20 22 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வரை ஒரு ஆண்டுகள் மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ ,கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2 மகள்களை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டரையும் ரூ.10ஆயிரம் அபராதமும்,மற்றொரு பிரிவுக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 10ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் பிரிவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என்றும் மொத்தம் 52 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் தமிழக அரசு ரூ. 10 லட்சத்தை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் தொழிலாளிக்கு 52 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டாலும் அந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இதனால் அவர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது..