பட்டப்பகலில் துணிகரம்… வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..!

கோவை சின்ன வேடம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் ( வயது 63)  அங்குள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து கலியபெருமாள் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..