மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நகராட்சி துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் குமார் ( வயது 30) மேட்டுப்பாளையம் நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது தாயார் ஜோதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..