கோவை விமான நிலையத்தில் திருச்சி சிவா பேட்டி..!

கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
திருச்சியில் NIT கல்லூரி கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு, உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது . அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள் எனவும், தமிழக முதல்வர் கடிதம் எழுதினார், எங்களைப் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.ஆனால் ஒன்றிய அரசு ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக்கூடாது என தெரிவித்த அவர், தமிழகம் சிறப்பாக செயல்படக்கூடிய மாநிலம், பல துறைகளில் முன்னிலை இருக்கிறோம், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது பல வகைகளில் முன்னிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார. தமிழகத்தை மாற்று கட்சி என்ற மனநிலையுடன் ஒன்றிய அரசு பார்க்கிறது எனவும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை கட்டுவதில் தவறில்லை, ஆனால் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை, உள்துறை அமைச்சர் இது குறித்து ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை என குற்றம்சாட்டினார். நாட்டு மக்கள் இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகளை பார்த்து எடை போட வேண்டும் என தெரிவித்தார்.

பழனி முருகன் மாநாடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு,
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும் எனவும் அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும், அந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும் , இந்த பிரச்சனையை பார்க்க வேண்டும் என தெரிவித்தார். நடிகர்கள் கட்சி துவங்குவது குறித்த கேள்விக்கு,
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இவர்கள் வரலாம் ,வரக்கூடாது என நினைக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற அவர், ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கட்சி ஆரமிக்கும் உரிமை உண்டு என தெரிவித்தார். தமிழக அரசு தன் கடமையை சரியாக செய்கிறது, பல குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறோம் என தெரிவித்த அவர், உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் சராசரியை விட அதிக அளவில் உயரத்தில் இருக்கிறோம் என்றார்.
தமிழ்நாடுக்கு ஒன்றிய அரசுடன் பிரச்சினை இல்லை, கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கிறோம்,
போராடுகிறோம் எனவும், ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். விசுவல் live bag மூலம் அனுப்பபட்டுள்ளது.