வீட்டில் 12 பவுன் நகை திருட்டு – வேலைக்கார பெண்கள் இருவர் கைது..!

கோவை , வடவள்ளி மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் பிரனேஷ் ( வயது 38) ஸ்பின்னிங் எந்திரம் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் வடவள்ளி சிறுவாணி ரோட்டை சேர்ந்த துரைராஜ் மனைவி லட்சுமி ( வயது 44) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் தனது மகன் திருமணத்திற்காக ஒரு மாத லீவு எடுத்துச் சென்றிருந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வேம்பு அவுன்யூவை சேர்ந்த கணபதி சுப்பையா மனைவி மாரியம்மாள் (வயது 40 ) என்பவர் வீட்டு வேலைக்கு வந்தார். 27- 7 – 20 24 அன்று வீட்டில் பீரோவில் இருந்த பிரனேஷின் மனைவியின் 12 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து பிரனேஷ் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரில் அவரது வீட்டில் வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி ,மாரியம்மாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். இதையடுத்து வடவள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த நகைகளை அவரது வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமியும் , மாரியம்மாளும் சேர்ந்து திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது..