சாக்கடை கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு..

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் சாக்கடை கால்வாயில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து உக்கடம் கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.அவர் எப்படி செத்தார் ? என்பது தெரியவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது.