நாயை அடித்து கொல்ல முயன்ற 2 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை சுந்தராபுரம் ,காந்திஜி ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்த நாயை 2 பேர் கொல்லும் நோக்கத்துடன் அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. .இது குறித்துசுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். நாயை கொல்ல முயன்றதாகஅதே பகுதியை சேர்ந்த உசேன் மற்றும் ஒருவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..