கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் பெண் திடீர் மாயம்..!

கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..