கோவை குற்றலா அருவியில் குளிக்க அனுமதி.!!

கோவை, மேற்கு தொடர்ச்சியாக மலை பகுதியில் ஒட்டியுள்ள, சிறுவாணி சாரல் என சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லும்  பாதையை வனத்துறையினரால் மூடப்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை பொழிவு குறைந்தும், கோவை குற்றலா சூழலில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க , சிறுவாணி சாரலை அனுபவிக்க அனுமதித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். வனத்துறையினர் கூறுகையில் தற்போது நீர் வரத்து குறைந்தது  காரணமாக பொதுமக்கள்,வனப்பகுதியில் உள்ள கோவை குற்றலாம் சூழலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபடுகிறது.  மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்..