மூத்த வழக்கறிஞரின் உடல் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம்..

கோவை நவாவூர் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ஞான பாரதி (வயது 76 ) மூத்த வழக்கறிஞர் .இவர் பல்வேறு வழக்குகளில் பணம் செலவு செய்ய முடியாத ஏழை -எளிய மக்களுக்கு ஆதரவாக வாதாடி உள்ளார் . அவர் வயது மூப்பு காரணமாக நேற்று தனது வீட்டில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு ஏராளமான வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வழக்கறிஞர் ஞானபாரதி ஏற்கனவே பதிவு செய்து விரும்பியபடி அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இன்று தானமாக வழங்கப்பட்டது..