13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது..!

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருபவர் 13 வயது சிறுமி. இவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவகுமார் (வயது 40) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபரை பாலியல் குற்றவாளி என உறுதி செய்து சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான சிவகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்..