நீலகிரி பெண் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை..

நீலகிரி மாவட்டம் உதக மண்டலம், கீராடாவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அனிதா ( வயது 33) இவர்களுக்கு 2016 – ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் சுபாஷ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அனிதா வடவள்ளி பக்கம் உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து ஜூஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அனிதா நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் ஜன்னலில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..