ஸ்கூட்டி மீது வேன் மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஆகாஷ் (வயது 25) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள மியூசிக் காலேஜ் ரோட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போ அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் வேன் இவர் மீது மோதியது. இதில் ஆகாஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வேன் டிரைவர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..