பாலியல் தொல்லை வழக்கை வாபஸ் பெற கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல்.!!

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கனக லட்சுமி (வயது 46) இவரது இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்தாராம் . இது குறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .இந்த நிலையில் அந்த வழக்கு வாபஸ் பெறுமாறு கூறி முருகனின் மனைவி பானுப்பிரியா, தாயார் சின்னம்மாள், தங்கை பழனியம்மாள் ஆகியோர் தனலட்சுமிக்கு கொலை  மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து ககை லட்சுமி, கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பானுப்பிரியா, சின்னம்மாள், பாண்டியம்மாள், ஆகியோரை தேடி வருகிறார்கள்..