கோவையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டின் ஜல்லிக்கட்டு காளை, சுழலும் உலக உருண்டை பிரமாண்ட சிலைகள் – மக்கள் பார்வைக்கு திறந்து வைப்பு.!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழலில் குளக்கரை சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், நவீனமான ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.. இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகுபலி திரைப்படத்தில் பணியாற்றிய (Flag Ship) ஃப்லாக் ஷிப் மீடியா குழுவினரால் உருவாக்கப்பட்ட வெண்கல குதிரை சிலை,தமிழர் பாரம்பரிய காளை மாடுகள் சிலைகளை திறந்து வைத்தார்கள்,இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் பிரம்மாண்ட வெண்கலத்தில் மனிதர் கையில் உலக உருண்டை சுற்றுவதை போன்று வடிவமைத்து அதில் உலக தண்ணீர் தேவை குறித்து விழிப்புணர்வு காண சிலை , மற்றொரு சிலையாக தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டின் அடையாளமாக ஜல்லிக்கட்டு காளையை வீரன் அடக்குவது போல சிலையையும் உருவாக்கி மக்கள் காண செய்தனர் இதன் துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு மாநகரின் மையப்பகுதியான ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் அமைக்க பெற்ற , சுழலும் உலக உருண்டை மற்றும் வீரருடன் ஜல்லிக்கட்டு காளை சிலைகளை திறந்து வைத்தனர்,சிலை முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்… விழாவில் பெஸ்டென் பம்ப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ பிரியா கவுரிசங்கர்,புல் மெசின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் Flag ship மீடியா இயக்குனர்கள் சதீஷ் குமார் மகாபிரபு ஆகியோர் உடனிருந்தனர்.