வீட்டில் நகை திருடிய தாய் கைது – மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!

கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ,இவரது மனைவி சுஜாதா ( வயது 54 )இவரது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க கம்மல்கள் திருட்டு போனது .இது குறித்து சுஜாதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தன . இந்த நிலையில் சுஜாதா வீட்டில் வேலை செய்து வந்த தொண்டாமுத்தூர் காந்திநகர் முத்துக்குமார் மனைவி சின்ன தங்கம் ( வயது 47) அவரது மகன் சபரீசன் (வயது 22)ஆகியோர்தான் இந்த திருட்டை நடத்தியது என்பது தெரிய வந்தது. இவர்களில் தாய் சின்ன தங்கம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. மகன் சபரீசனை போலீசார் தேடி வருகிறார்கள்..