மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தொழிலாளியை அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்ஷா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வா என்ற செல்வராஜ். ( வயது 45)தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2022- ம் ஆண்டு அவருடன் வேலை பார்த்த மகாலிங்கம் (வயது 30) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து மகாலிங்கத்தை அங்கு கிடந்த பனை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.
இந்த குற்றத்திற்காக செல்வா என்றசெல்வராஜ் கைது செய்யப்பட்டு ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று முடிவு பெற்று குற்றவாளி செல்வா என்ற செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர்  பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பாராட்டினார்..