கோவை கல்லூரி மாணவிகள் திடீர் மாயம்..!

கோவை கணபதி, சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகள் கீதாஞ்சலி (வயது 17) கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை லிங்கேஸ்வரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பக்கம் உள்ள தேவ சின்னாம் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கிருத்திகா ( வயது 20) இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி. காம் . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பீளமேட்டில் உள்ள சவுபாக்கியா நகரில் பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். கடத்த 5 – ந் தேதி விடுதியில் இருந்து திடீரென்று மாயமாக்கி விட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..