கோவை இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சின்னவேடம்பட்டி, ரேணுகா நகரில் வசிப்பவர் அஜித் குமார். அவரது மகன் இந்திரஜித் ( வயது 23) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு கோத்தகிரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர் . இந்த நிலையில் அவரது காதலி அவரிடம் பேசுவதை தவிர்த்தார் . இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்ட இந்திரஜித் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவர் ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தின் காரணமாக கத்தியால் தனது இடது கையை வெட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..