முன்விரோதத்தால் பைக் எரிப்பு – ஒருவர் கைது..!

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ மர்ம  நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர் .இதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முன் விரோதம் காரணமாக அம்ப்ரோஸ் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரிய வந்தது . இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர் . அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..