கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கண்ணூர் ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு (ஆர் பி.எப்.)நேற்று ரகசிய தகவல் வந்தது. அதன்படி கண்ணூர் ரயில் நிலையத்துக்குள் வர முயன்ற கோவை ரயில் இடையே நிறுத்தப்பட்டு அதில் உள்ள முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த ஒருவரின் கைப்பையை கைப்பற்றி சோதனை செய்தனர் .அதில் கட்டு கட்டாக ரூ 40 லட்சம் ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் கோட்டையத்தை சேர்ந்த சபின் ஜலீல் ( வயது 30) என்பது தெரிய வந்தது. அவரிடம் ஹவாலா பணம் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது..