கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு தண்டனை கைதி மரணம்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு,பகுதியை சேர்ந்தவர் குள்ளன் ( வயது 57) இவர் ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 2009 – ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சிறையில் நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .இதை யடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த மற்றொரு கைதிகோவை அரசு மருத்துவமனையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.