பட்டப்பகலில் துணிகரம்… வடமாநில தொழிலாளியிடம் பணம் பறிப்பு..!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் ( வயது 42 ) இவர் ஈரோட்டில் தங்கி யிருந்து ” டைல்ஸ்” ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவர் நேற்று வேலை செய்வதற்காக கோவைக்கு வந்திருந்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரது பையை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதில் ரூ 38 ஆயிரம் பணம் இருந்தது.இதுகுறித்து மனோஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . பட்டப்பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணா சிலை அருகே  நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..