பாத்ரூமில் குளித்த பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர் கைது..!

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ,ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதை பார்த்ததும் கவிதா சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தப்பி சென்றுவிட்டார். இது குறித்து கவிதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வடவள்ளி ,வேம்பு அவென்யூ, தாமரை வீதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 25 )என்வரை கைது செய்தனர் .இவரிடம் இருந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டது..