ஒரே நாளில் பிளஸ் 1 மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்..!

கோவை தடாகம் ரோட்டில் உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20- ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஆர்.. எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதேபோல கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் .அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் . இவரும்  பத்தாம் தேதி திடீரென்று மாயமாகிவிட்டார் . இது குறித்த இவரது தந்தை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..