கல்லூரி மாணவருக்கு ஹெல்மெட் தாக்குதல்..!

கோவைஅருகே உள்ள சூலூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மதன் பிரகாஷ் ( வயது 20 )பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (சி எஸ் ) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம்,கறிக்கடை மைதானத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது கல்லூரி நண்பர்கள் நமீதா, ஜோதிகா ,திரிஷா, ஜெய் ஸ்ரீ , சௌந்தர்யா, பிரியா அகிலா, மது காந்த், ஆகியோருடன் சாப்பிட சென்றார் . திரும்பி வரும் போது அங்கு வந்த பாப்பநாயக்கன்பாளையம் , நியூ சிற்றம்பலம் லே-அவுட் சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகன் ( வயது 19) என்பவர் மதன் பிரகாஷை வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் அவரை ஹெல்மெட்டால் தாக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து மதன் பிரகாஷ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெகன் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..