912 மதுபாட்டில்கள், குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் இடையர்பாளையம் ரோடு , மாச்சம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு மது பாட்டில்களையும், குட்காவும் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 912 மது பாட்டில்கள், 100 பாக்கெட் குட்கா, பணம் ரூ .2700 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வெட்டிவயலைச் சேர்ந்த பிரபாகர் ( வயது 33 ) பாண்டி ( வயது 41 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது போத்தனூர்,சாரதா மில் ரோட்டில் தங்கி இருந்தனர். இது தொடர்பாக முனியசாமி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்..