மிலாடி நபி பண்டிகை… டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்..!

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவர்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட மதுபான விற்பனைகளுக்கு நாளை  ( செவ்வாய்) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட நாளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்தில் இருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..