மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் மருத்துவ ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி கண்ணன் (வயது 54) சிங்காநல்லூரில் இ. எஸ்.ஐ. மருத்துவமனையில் டிஸ்பென்சரி உதவியாளராக வேலை பார்த்து வந்தார் . குடிப்பழக்கம் உடையவர் . கடந்த 15 நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம் . அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மனைவி நாகமணி பேரூர் போலீஸ் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..