ஆற்றைக் கடந்த மின்வாரிய ஊழியர் நீரில் மூழ்கி பலி..

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள, கெம்மராம் பாளையம்,தொண்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. (வயது 52) பரளிபவர் ஹவுஸில் இ.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொண்டை பத்திரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றை கடந்த போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து இவரது மகள் சங்கீதா பில்லூர் டேம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..