அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு..

தூத்துக்குடி மாவட்டம், கருவேலம்பாடு,மேல தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 58) இவர்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் தனது மகள் புஷ்பலதா வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபெருமாளும், அவரது தம்பி வெள்ள துரையும் மது அருந்தினார்களாம். பின்னர் பெத்தநாயக்கன்பாளையம்,கீர்த்தி நகரில் உள்ள உறவினர்வீட்டில் படுத்து உறங்கினார்கள்: சிவபெருமாள் எழுந்திருக்கவில்லை. அவரை சிகிச்சைக்காக கோவில்பாளையத்தில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மகள் புஷ்பலதா கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..