கோவை மருத்துவமனை பெண் ஊழியர் திடீர் மாயம்..!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பக்கம் உள்ள குருவி குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மலர்விழி (வயது 21) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு சித்ரா, பூங்கா நகரில் உள்ள மருத்துவமனை பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தாயார் மாரியம்மாள் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..