கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கான கட்டணத்தை காசோலையாக வழங்கல்.!!

கோவை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தடாகம் ரோட்டில் உள்ள KNG புதூர் பஞ்சாபி சங்க மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிதியுதவிகளை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு வாயிலாக சரிதா ஜெயின் டிரஸ்ட் சார்பில் கல்வி பயின்று வரும் மாற்றுத் திறாளிகள் மாணவ,மாணவிகள் தங்கள் குடும்படுத்திருடன் வந்து காசோலைகள் பெற்றுக்கொண்டனர்.
இதில் சங்க தலைவர் ஆ கன்னியப்பன் ,செயலாளர் ஹேமா தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக கோவை ரோட்டரி கிளப் (செண்டென்னில்பெயின்எசவ்) தலைவர் KC ஸ்ரீனிவாசன் , சீனியர் அசொசியேசன் LIC, பஞ்சாபி சங்க நிர்வாகிகள்,பிரம்மஸ்ரீ ராஜேந்திரன், பொம்மியம்மாள், G.பாலகிருஷ்ணன்,.மகேஷ் தாயம்மாள் டிரஸ்ட், தலைவர் திருமலை ரவி, COGIMWA தினகரன் குகன் டிரஸ்ட் ஆகியோர் கலந்துகொண்டு 45 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் .1,34,707/- தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினர். நன்றியுரையாக சங்க பொருளாளர் பழனிசாமி வழங்கினார்.