பைக் மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 71) சம்பவத்தன்று இவர் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஒட்டி வந்த பதிவு எண் பெறாத இ.பைக் இவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் . இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து பலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஓட்டி வந்த ராமநகர் சாஸ்திரி ரோட்டை சேர்ந்த பாலசுரேஷ்குமார் மகள் அஸ்விதா ( வயது 18) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்..