மகன் இறந்த துக்கம் தாங்காமல் விஷ மாத்திரைகள் தின்று தாய் தற்கொலை..

கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மெர்சி ( வயது43) இவர் நேற்று அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.. விசாரணையில் மெர்சியின் மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதிலிருந்து மெர்சி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.