ஆற்றில் மூழ்கி ஒருவர் பரிதாப பலி..

கோவை அருகே உள்ள போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தயாளன் ( வயது 42 )இவர் நேற்று தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி பக்கம் உள்ள குளத்தூர் கன்னிமார் கோவில் ஆற்றில் குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது மனைவி உஷாபிரதீபா பொள்ளாச்சி தாலுகா போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.