உதகை முருகன் கோவில் அருகே பயன்படாமல் இருந்த கிணறு – நகராட்சி ஆணையாளர் மற்றும் ஓவர்சியர் நேரில் ஆய்வு..!

நீலகிரி மாவட்ட உதகை 18ஆவது வார்டு பகுதி எலிகள் முருகர் கோவில் அருகே பல வருடங்களால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த குடிநீர் கிணற்றை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் குறைபாடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி கூறி வந்ததின், எல்க்கில் முருகர்கோவில் பகுதியில் உள்ள கிணற்று நீரை பயன்பாட்டுக்கு கொண்டுவர பலமுறை நகரமன்ற கூட்டத்திலும் அதிகாரி மத்தியிலும் எடுத்துக் கூறியுள்ளார். இப்பகுதிகளில் கடும் தண்ணீர் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதை தடுக்கும் பொருட்டு காலை நமது 18 வது வார்டு எல்க்கில் பகுதிக்கு உதகை நகராட்சி ஆணையாளர் மற்றும் ஓவர்சியர் நேரடியாக வந்து ஆய்வு செய்து உடனடியாக அந்த கிணற்று நீரை அப்குதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நகர மன்ற உறுப்பினர் பகுதி மக்கள் சார்பாக KA.முஸ்தபா Mc மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உதகை ஆய்வு மேற்கொண்ட உதகை நகராட்சி ஆணையாளர் மற்றும் ஓவர்சியார் நகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்..