வேகத்தடையில் திடீர் பிரேக்… ஜீப்பில் பயணம் செய்தவர் கீழே விழுந்து பரிதாப பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ரோகித் காளிங்கராயன் ( வயது 45) இவர் நேற்று ஒரு ஜீப்பில் ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது வேகத் தடைக்காக டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .இதனால் ஜீப்பில் முன் சீட்டில் இருந்திருந்த ரோகித் காளிங்கராயன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து ஆனைமலை போலீசில் புகார்செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஜீப் ஒட்டி வந்த கம்பாள பட்டியை சேர்ந்த பிரதீப் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.