மும்பை காவல் அதிகாரி எனக் கூறி ரூ.1 கோடியே 18 லட்சம் மோசடி – 3 பேர் கைது..!

சென்னை : அப்பாவி பொதுமக்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணைய தள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு fedex வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். மும்பை காவல் துறை அதிகாரி என்று சொல்லி பேசிய நபர் அந்தப் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் பாதிக்கப்பட்ட நபர் அவர் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் அவர் ரூ 1 கோடியே 18 லட்சம் பணத்தை  பல்வேறு வங்கிகளுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் அவர் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். இது தொடர்பாக ஆக்ட் 2008 sccic குற்ற எண் 36/2024 under section 318(4)319(2)336(3)340(2)bns&66d of it amendment axt 2008ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் தனிப்படை அமைத்து மோசடி செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளர் ரமேஷ் பாய் படாபி போக்ரா மற்றும் முகவர்கள் பரேஸ் நர்ஷீ பா ஹாய் மற்றும் விவேக் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்..