தொழில் தொடங்குவதாக கோவை பட்டதாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி..!

கோவை அருகே வேடபட்டி , ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் மனோகரன்.இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28 )எம்.பி.ஏ. பட்டதாரி . இவர் தண்ணீர் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.. இவரிடம் மார்சல் பிரிட்டோ என்பவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு லண்டனில் பி. பி. ஓ .தொழில் தொடங்கலாம் என்று கூறி ரூ 48 லட்சம் வாங்கினாராம். பணத்தைப் பெற்றுக் கொண்டு தொழில் எதுவும் தொடங்கவில்லை. மோசடி செய்து விட்டார். இது குறித்து பிரவீன் குமார் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மார்சல் பிரிட்டோ மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..