திருச்சியில் வட்ட பேருந்து சேவை – அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்..!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையம், இபி ரோடு, காந்தி மார்க்கெட், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, உறையூர், மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்து அடைந்து சுற்றுவட்ட பேருந்தாக செல்ல இருக்கிறது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலத்தின் பொது மேலாளர் திரு.அ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் வணிகம் திரு.ஆர்.சாமிநாதன், கோட்ட மேலாளர் திரு.புகழேந்திராஜ்,பகுதி கழகச் செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை வட்டக்கழகச் செயலாளர் சங்கர். கழக நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.