வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் திருட்டு – வேலைக்காரர்கள் 2 பேர் மீது புகார்..!

கோவை கணபதி, கன்னிமார் நகரை சேர்ந்தவர் கில்மென்ட் துரைசிங் (வயது 74 ) இவரது வீட்டில் சண்முகம், நடராஜ்  ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவரது வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கில்மென்ட் துரைசிங் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சண்முகம், நடராஜ் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.