கணவருடன் கள்ளக்காதல்… தட்டி கேட்ட மனைவியின் மண்டையை உடைத்த கள்ளக்காதலி..!

கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் என். ஆர் .வி.நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40) இவரது கணவர் சிவகுமாருடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்பவர் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம்.. இதை அறிந்த மனைவி சித்ரா வனிதாவிடம் தட்டி கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சித்ராவை காலால் மிதித்து கீழே தள்ளி தலையில் கல்லால் தாக்கினாராம் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வனிதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..