பொது இடத்தில் பழைய மின்சார ஒயர்களை எரித்தவர் கைது..!

கோவை கரும்புக்கடை எம்.சி.ஆர் .நகரை சேர்ந்தவர் சையத் ரபிக் (வயது 42) பழைய இரும்பு தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று கரும்புக்கடை அண்ணாநகர் ,கிரீன் பீல்டு பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் முன் பழைய ஒயர்களை தீ வைத்து வைத்து எரித்தாராம். இதனால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று சையத் ரபிக்கை கைது செய்தார் . 1 கிலோ பழைய ஒயர்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்..