2 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது..!

கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். அப் போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்தையா மனைவி சந்தாமணி (வயது 71 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது . இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்..