இளம்பெண்ணை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய இளைஞர் கைது.!!

திண்டுக்கல் , பாலகிருஷ்ணாபுரம்,ரங்கநாயகி நகரை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் தனுஷ் வெங்கட் (வயது 20) இவர் கோவை சேரன் மாநகர் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து ஆர். எஸ் . புரத்தில் உள்ள பிரபல செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே கடையில் ஊழியராக வேலை பார்த்து வரும் 19 வயது பெண்ணை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தினாராம்.. பின்னர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரது உடல் உறுப்புகளை பல கோணங்களில் வீடியோ எடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அந்த பெண்ணிடம் கூறினார்கள். அந்த பெண் ஆர். எஸ். புரம் மேற்கு பகுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி தனுஷ் வெங்கிட்டை நேற்று கைது செய்தார். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..