கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் உயிர் காவு வாங்குவதற்கு காத்திருக்கும் மின்கம்பம்… பீதியில் மக்கள்.!!

கோவை ராமநாதபுரம் சுங்கம், திருச்சி ரோட்டில் ஆதித்யா அப்பார்ட்மெண்ட் அருகில் பத்மா லே-அவுட் செல்லும் நுழைவு வாசலில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது அடியில் துருப்பிடித்து சாய்ந்த நிலையில் உள்ளது. இது எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு அப்பார்ட்மெண்டில் 72 வீடுகளில் குடியிருப்பவர்கள் மற்றும் பத்மா லேஅவுட்டில் குடியிருப்பவர்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சுங்கம் திருச்சி ரோட்டில் இந்த மின்கம்பம் சாய்ந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்படும். எப்போதும் காவு கொடுக்க காத்திருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..